கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை: இலங்கை அமைச்சர் பேட்டி
சென்னை: இந்திய நாடாளுமன்ற ஒப்புதலோடு பெறப்பட்ட கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை என இலங்கை அமைச்சர் லட்சுமண் கிரியல்லா தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து நேற்று மாலை விமானம் மூலம் சென்னை வந்திறங்கினார் இலங்கை தோட்ட தொழில் அமைச்சர் லட்சுமண் கிரியல்லா. விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கைக்கு வந்து சென்றபின்னர் இருநாடுகளுக்கான உறவு மேம்பட்டு உள்ளது. இதனால் இருநாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. இந்தியா-இலங்கை மீனவர்களுக்கு இடையே 3 கட்ட பேச்சுவார்த்தை நடந்து உள்ளது. இந்திய மீனவர்கள் சில கோரிக்கைகளை வைத்து உள்ளனர். அவற்றை இலங்கை அரசு பரிசீலித்து வருகிறது. இலங்கையில் புதிய அரசு பதவி ஏற்றபின் சிறுபான்மை மக்களுக்கு அதிக அக்கறையுடன் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. தமிழர் பகுதியில் உள்ள ராணுவம் படிப்படியாக குறைக்கப்படும்.
தமிழர் பகுதியில் ராணுவத்திற்கு போக மீதம் உள்ள இடங்கள் வழங்கப்படும். இந்திய மீனவர்கள் கடல் தாண்டி மீன் பிடிக்கின்றனர். அதுபோல் சில நேரங்களில் இலங்கை மீனவர்களும் கடல் தாண்டி வருகின்றனர். கடலில் எல்லையை நிர்ணயம் செய்ய முடியாது. இந்திய நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுத்தான் கச்சத்தீவு இலங்கையிடம் வழங்கப்பட்டது. சிலர் அரசியல் ஆதாயத்திற்காக கச்சத்தீவை திரும்ப பெற வேண்டும் என்று கூறுகின்றனர். கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications