For Daily Alerts
Just In
தமிழக மீனவர்கள் 10 பேர் இன்றும் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு
தமிழக மீனவர்கள் 10 பேரை இன்றும் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் 10 பேரை இன்றும் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை சிறையில் உள்ள தங்களை விடுதலை செய்ய கோரி தமிழக மீனவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை நேற்று சிறைபிடித்தது.
இந்நிலையில் இலங்கையின் பருத்தித்துறை கடற்பரப்பில் மீன்பிடித்ததாக மேலும் 10 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்களின் ஒரு விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தொடரும் கைதால் மீனவர்கள் கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Comments
English summary
Ten TamilNadu fishermen were arrested by the Sri Lankan Navy on Today.
Story first published: Friday, November 17, 2017, 8:06 [IST]