கச்சத்தீவு அருகே 14 மீனவர்கள் மீண்டும் சிறைபிடிப்பு- இலங்கை கடற்படை அட்டூழியம் தொடக்கம்!

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: இலங்கையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 14 இந்திய மீனவர்களையும், அவர்களது 3 படகுகளையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 3 விசைப்படகுகளையும் அதில் இருந்த 14 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சிறை பிடித்து சென்றுள்ளனர். சிறைப்பிடித்து செல்லப்பட்டுள்ள மீனவர்கள் காங்கேசந்துறை கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு உள்ளனர்.

Sri Lankan Navy detains 14 Indian fishermen

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக சிறை பிடிக்கப்பட்டு இருந்த தமிழக மீனவர்கள் 126 பேர் தீபாவளிக்கு முன் விடுதலை செய்யப்பட்டு கடந்த 13 ஆம் தேதி சொந்த ஊர் திரும்பினார்கள். இந்நிலையில் இலங்கை கடற்படையினரின் சிறைபிடிக்கும் நடவடிக்கைகள் மீண்டும் துவங்கி இருப்பது தமிழக மீனவர்களை வேதனை அடைய செய்துள்ளது.

புயல், மழை மற்றும் காற்று காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல கடந்த ஒரு வார காலமாக தடை விதிக்கப்பட்டு இருந்தது. நிலைமை சீரானதை தொடர்ந்து நேற்று மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். மீன் பிடிக்க சென்ற முதல் நாளிலேயே மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டிருப்பது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+