"வஸ்திர மரியாதையுடன்" ஸ்ரீரங்கம் கோவில் சித்திரைத் தேரோட்டம்
திருச்சி: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் மிகவும் சிறப்பு வாய்ந்த பெருமையான வஸ்திர மரியாதை ஸ்ரீரங்கம் வருகிறது என்று அறநிலையத்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை கமிஷனர் கல்யாணி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் சித்திரை மாத தேர் திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று முன் தினம் நம்பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இன்று நம்பெருமாள் "நெல் அளவு" கண்டருளுகிறார்.

நாளை காலை 10 மணிக்கு ஸ்ரீவில்லிப்புத்தார் ஆண்டாள் கோவிலில் இருந்து, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வஸ்திர மரியாதை வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
வஸ்திர மரியாதை இக்கோயிலின் இணை கமிஷனர், செயல் அலுவலர், அறங்காவலர் குழுத் தலைவர், அறங்காவலர்கள் முன்னிலையில் வழங்கப்படவுள்ளது.
தொடர்ந்து ரெங்கவிலாச மண்டபத்தில் வஸ்திரம் மற்றும் மங்கலப் பொருட்களை மக்கள் பார்வைக்கு வைத்து சகல மரியாதையுடன் வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. சித்திரைத் தேரோட்டம் வரும் 27 ஆம் தேதி நடக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications