தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை... கோடியக்கரை அருகே பதற்றம்!
கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்த தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர்.
கோடியக்கரை : கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்த தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர் தமிழக மீனவர்கள். ஆறுகாட்டுத் துறையைச் சேர்ந்த 8 மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை கயிறை வைத்து விரட்டியடித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த தமிழக மீனவர்கள் உயிருக்குப் பயந்து கரை திரும்பியுள்ளனர். கோடியக்கரை கடல்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 9 மீனவர்களை இந்த மாத தொடக்கத்தில் இலங்கைக் கடற்படையினர் விரட்டியடித்தனர்.
மீனவர்களிடம் இருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள வலைகளையும், செல்போன் மற்றும் ஜிபிஎஸ் கருவிகளை பறித்துக் கொண்டு அவர்கள் விரட்டியடித்தனர்.
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை இலங்கைக் கடற்படையினர் வாடிக்கையாக வைத்துள்ளதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிப்பதாக மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications