நல்ல தீர்ப்பு தரணும்: மு.க.ஸ்டாலின், ஈவிகேஎஸ் இளங்கோவன்
சென்னை: ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடகா அரசு மேல் முறையீடு செய்துள்ளது வரவேற்கத்தக்கது என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த எதிர்பார்ப்பு தி.மு.க.விற்கு மட்டுமல்ல, மக்களுக்கும் தான். தீர்ப்பு மக்களுக்கு பயன் அளிக்கும்படியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு இன்று மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. கர்நாடக அரசுத் தரப்பில் வழக்கறிஞர் அரிஸ்டாட்டில், உச்சநீதிமன்ற பதிவாளரிடம் இன்று காலை 10.30 மணியளவில் மேல்முறையீட்டு மனுவினை தாக்கல் செய்தார். அந்த மனுவில், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோரை கர்நாடக உயர்நீதிமன்றம் விடுவித்தது தவறு என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சொத்துகளை கணக்கீடு செய்ததில், தவறு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவினை பரிசீலித்த உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகம், மனுவினை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது.

இதனையடுத்து, இந்த மனு, உச்சநீதிமன்ற விசாரணைக்காக நிலுவையில் உள்ள மனுக்களின் பட்டியலில் இணைக்கப்படும். பின்னர் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தத்து, மனுவினை ஆராய்ந்து விசாரணை நீதிபதிகள் யார் யார் என்பதை முடிவு செய்வார்.
ஸ்டாலின் வரவேற்பு
சொத்து குவிப்பு வழக்கு விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்துள்ளது குறித்து கருத்து கூறியுள்ள தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின், மக்களின் எதிர்பார்ப்பின் படி ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடகா அரசு மேல் முறையீடு செய்துள்ளது. இந்த எதிர்பார்ப்பு தி.மு.க.விற்கு மட்டுமல்ல, மக்களுக்கும் தான். தீர்ப்பு மக்களுக்கு பயன் அளிக்கும்படியாக இருக்கும் என நம்புகிறேன் என்று கூறினார்.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கருத்து
இதேபோல தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன், இளங்கோவன் வரவேற்றுள்ளார். விடுதலையை எதிர்த்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் காலநிர்ணயம் செய்து தீர்ப்பு தரவேண்டும் என்று கூறியுள்ளார். தலைமை நீதிபதி தத்து மீது புகாரிருப்பதால் ஜெயலலிதா வழக்கில் அவரது தலையீடு இருக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications