அதிமுக எம்பிக்களைப் பற்றி பேச ஸ்டாலினுக்கு எந்த உரிமையும் இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ
அதிமுக எம்பிக்களைப் பற்றிப் பேச ஸ்டாலினுக்கு எந்த வித உரிமையும் இல்லை என்று கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி : அதிமுக எம்பிக்களைப் பற்றி விமர்சிக்க திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு எந்த வித உரிமையும் இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
வேலைக்குச் செல்லும் ஏழை பெண்களுக்கு மானியத்துடன் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் விழா கோவில்பட்டி அரசு பெண்கள் பள்ளியில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை வகித்தார்.

இதில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு 100 பெண்களுக்கு இருசக்கர வாகனங்களை வழங்கி திட்டத்தினை தொடங்கி வைத்தார். பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமேடையில் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார். மேலும், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி கருத்தினை கேட்டுள்ளார்.
அனைத்துக் கட்சி பிரதிநிதிகளை பிரதமர் மோடி சந்திக்க மறுத்ததாக கூறுவது தவறான தகவல். அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்த பின்பு பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்குவதாக தெரிவித்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதற்காகவே மத்திய அமைச்சரவை பதவியில் இருந்து அ.தி.மு.க. 1998-ல் விலகியது. ஆனால், அதுகுறித்து ஸ்டாலின் வாய் திறக்கவில்லை.
14 ஆண்டுகளாக மத்திய அமைச்சரவையில் இருந்த தி.மு.க. காவிரி பிரச்சினையை கருத்தில் கொண்டு அப்போது திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினமா செய்திருக்களாமே, ஏன் செய்யவில்லை.
அப்போது அது பற்றி எந்தவித கருத்தும் கூடத் தெரிவிக்கவில்லை. இப்போது தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் எம்.பி.க்கள் ராஜினாமா குறித்து பேசுவதற்கு தகுதியும், உரிமையும் கிடையாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications