மேயர் சைதை துரைசாமி மீது ஸ்டாலின் அவதூறு வழக்கு
Subscribe to Oneindia Tamil

கடந்த வாரம் சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றபோது பேசிய மேயர் சைதை துரைசாமி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மேயராக பொறுப்பில் இருந்தபோது, ரூ.292.31 கோடி நிவர்த்தி செய்யப்படாமல் நிலுவையில் உள்ளதாகவும், பின்னர், ம.சுப்ரமணியன் மேயர் பொறுப்பு வகித்த போது, ரூ.125 கோடி நிவர்த்தி செய்யப்படாமல் நிலுவையில் உள்ளதாகவும், தணிக்கைத் துறை தெரிவித்துள்ளதாக அறிவித்தார்.
இது உண்மைக்குப் புறம்பான தகவல் என்று மு.க.ஸ்டாலினும், ம.சுப்ரமணியமணியமும் தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போதைய சென்னை மேயர் சைதை துரைசாமிக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனு வரும் 22 ம் தேதி விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications