என்னாது அரசு தொய்வின்றி நடக்கிறதா?, செம காமெடி.. மு.க.ஸ்டாலின் கேலி!
தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டை பகட்டான பேச்சுகள் மூலம் மறைக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுக அரசு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் அக்கறை செலுத்த வேண்டும் என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை காரணமாக தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் அரசுப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் தான் முதல்வராக பதவியேற்ற 70 நாட்களில் 1560 கோப்புகளில் கையெழுத்திடடுள்ளதாக தமிழக முதல்வர் பழனிச்சாமி கூறி வருகிறார்.

அரசின் செயல்பாடு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக செயல்தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டை பகட்டான பேச்சுகள் மூலம் மறைக்க முயல்வதாக குற்றஞ்சாட்டினார். அரசு வேலை தொய்வின்றி நடப்பதாக கூறுவதை நிறுத்தி விட்டு மக்களுக்கு பயனளிக்கும் வகையில் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் முதல்வருக்கு தெரியாமல் எப்படி இது போன்ற ஒரு தவறான தகவல் அளிக்கப்பட்டிருக்கும் என்றும் ஸ்டாலின் வினவியுள்ளார். 1570 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளதாக பெருமைப்படுகிறார் முதல்வர் ஆனால் லோக் அயுக்தா அமைப்பை உருவாக்கும் கோப்பில் கையெழுத்திட்டாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications