எங்கும் ஊழல்... திவாலாகப் போகிறது தமிழக அரசு: மு.க.ஸ்டாலின் அச்சம்!
சென்னை: தமிழகத்தில் ஊழல் லஞ்சம் நடமாடிக்கொண்டிருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், அரசு கடனில் மூழ்கி திவாலாகும் சூழ்நிலைக்கு போய்க்கொண்டிருக்கிறது என்று அச்சம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 2015 - 2016ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நிதிநிலை அறிக்கையை முதல் அமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
பட்ஜெட் உரையை புறக்கணித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

பினாமி அரசு
இன்று அதிமுகவினுடைய பினாமி அரசின் சார்பில் 2015 - 2016ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதனை புறக்கணித்து திமுக வெளிநடப்பு செய்தது. ஏனென்று கேட்டால், இந்த ஆட்சியில் அனைத்து துறைகளையும் பொருத்தவரையில் கடைசி இடத்தில் போய்கொண்டிருக்கிறது.
எதில் முதலிடம்
சட்டம் ஒழுங்கு கெட்டுக்கொண்டிருக்கிற நிலையில் கொலை, கொள்ளை மட்டுமல்ல, ஊழல் லஞ்சம் நடமாடிக்கொண்டிருக்கக்கூடிய நிலையில் தமிழ்நாடு முதல் இடத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.
அனைத்திலும் ஊழல்
உதாரணமாக முட்டை வாங்குவதில் ஊழல், பருப்பு வாங்குவதில் ஊழல், நெடுஞ்சாலைத்துறை பணிகளில் ஊழல், மாநகராட்சியில் சொல்ல முடியாத அளவிற்கு ஊழல், ஆவின் பாலில் ஊழல், மின்சாரம் வாங்கியிருப்பதில் பல ஆயிரம் கோடி ஊழல், அரசு பணிகளுக்கு டெண்டர் விடுவதிலும் ஊழல் நடந்துள்ளது. ஆடு, மாடு, மிக்சி கிரைண்டர் போன்ற நலத்திட்டங்கள் வழங்குவதிலும் ஊழல் நடைபெறுகிறது.
திவாலாகப் போகிறது
அதிமுக அரசின் நிதி நிலைமை இன்றைக்கு மிக மோசமான நிலையில் இருந்துகொண்டிருக்கிறது. கடனில் மூழ்கி திவாலாகும் சூழ்நிலைக்கு போய்க்கொண்டிருக்கிறது. உதாரணமாக மின்சார வாரியத்தின் கடன் 72 ஆயிரம் கோடி ரூபாய். போக்குவரத்துக் கழகங்களில் நிதி இழப்பு 2 ஆயிரம் கோடி ரூபாய். ஆக பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களை சேர்த்துப் பார்த்தால் மொத்த கடன் 4 லட்சம் கோடி ரூபாய்.
கடைசி இடம்
ஆக கடனைக் கூட திருப்ப செலுத்த முடியாத நிலையிலே அரசாங்கம் இருந்து கொண்டிருக்கிறது. தொழில் உற்பத்தியில் கடைசி இடத்திற்கு போய் கொண்டிருக்கிறது.
காரணம் இதுதான்
இதனை கண்டிக்கின்ற வகையில், இப்படிப்பட்ட நிலையில் இந்த அரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு தார்மீகப் பொறுப்பை இழந்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டும் வகையில்தான் திமுக சார்பில் வெளிநடப்பு செய்திருக்கிறோம் என்று தாங்களின் வெளிநடப்புக்கான காரணத்தை கூறினார் மு.க.ஸ்டாலின்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications