பென்னிகுயிக் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின்
தேனி: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று கூடலூர் அருகே உள்ள பென்னிகுயிக் நினைவிடத்திற்குச் சென்று சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
லோயர் கேம்ப் பகுதியில் பென்னிகுயிக் நினைவிடம் அமைந்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிக்குயிக் நினைவாக அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவிடத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

இந்த நினைவிடத்திற்கு இன்று மு.க.ஸ்டாலின் வந்தார். சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பென்னிகுயிக்குக்கு மரியாதை செலுத்தியது, மகிழ்ச்சியளிக்கிறது. முல்லைபெரியார் அணை தொடர்பாக வந்த உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு திராவிட முன்னேற்ற கழகம்தான் காரணம். ஆனால் ஒரு சில கட்சிகள் நாங்கள்தான் முல்லை பெரியார் அணை பிரச்சனைக்காக தொடர்ந்து போராடி வருவதுபோல் பேசி வருகின்றன.
தமிழ்நாட்டின் உரிமைகள் பறிக்கப்பட்டு வரும் நிலையில் உரிமைகளை காக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மற்ற மாநில முதல்வர்கள் எல்லாம் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி நேரில் பிரதமரை சந்தித்து வலியுறுத்தி வரும் நிலையில் இவர் மட்டும் கடிதம் எழுதி வருகிறார். தமிழக உரிமைகளுக்காக போராட வேண்டிய அரசு எதையும் கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறது என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications