சி்றப்பாக செயல்படாவிட்டால் பதவியைப் பிடுங்கி விடுவோம் - ஸ்டாலின் எச்சரிக்கை
தென்காசி: இளைஞர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்யாவிட்டால் அவர்களிடம் ஓப்படைக்கப்பட்டிருக்கும் பணி உடனடியாகப் பறிக்கப்படும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் காட்டமாக தெரிவித்தார்.
நெல்லை மாவட்ட இளைஞரணி சார்பில் கட்சி செயல்பாடு தொடர்பாக ஆய்வு கூட்டம் நடந்தது. ஆய்வுப் பணியை திமுக பொருளாளர் முக ஸ்டாலின் மேற்கொண்டார். மாநில இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சுப்பிரமணியன், கருப்பசாமி பாண்டியன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில், சில இளைஞரணி அமைப்புகளின் கட்சி பணிகள் எனக்கு திருப்தி தரும் வகையில் இல்லை. இந்த நிர்வாகிகளுடன் இது முதல் ஆலோசனை மற்றும் ஆய்வு என்பதால் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. ஆனால் அடுத்த ஆண்டும் இது போன்ற ஆய்வு கூட்டத்தில் இளைஞரணி பணிகள் திருப்தி இல்லை என தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட நபர்களின் கட்சி பணிகள் உடனடியாக தலைமையின் உத்தரவுப்படி பறிக்கப்படும் என ஸ்டாலின் எச்சரித்தார்.

கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் ரசாக், திமுக பொருளாளர் சேக் தவூது, செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், கடையநல்லூர் நகராட்சி தலைவி சைபுன்னிசா, மாவட்ட பிரதிநிதி கருப்பன் நாயக்கர், ஓன்றிய இளைஞரணி அமைப்பாளர் திரவியம், செங்கோட்டை லிங்கராஜ், தென்காசி நகர செயலாளர் ஆயன் நடராஜன், அசன், சூசைரத்தினம், வல்லம் திவான் ஓலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதிய நிர்வாகிகளுக்கு தி்முக பொருளாளர் ஸ்டாலின் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்ததால் அவர்கள் பதட்டத்துடன் காணப்பட்டனர். இங்கேயும் அடுத்த ஆண்டு களையெடுப்பு தொடரும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications