ஊழல் புகாரில் அதிகாரிகளை விசாரிக்கும் முன் அரசின் கருத்தைக் கேட்க வேண்டும்: தமிழக அரசு மனு
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஊழல் புகாரின் கீழ் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை விசாரிக்கும் முன் அரசின் கருத்தைக் கேட்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் முன்பு தமிழக அரசின் கருத்தைக் கேட்பது தொடர்பான அரசாணையை தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

அந்த அரசாணையில், அரசின் கருத்தைக் கேட்ட பிறகே லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளது.
ஐஏஎஸ் உள்ளிட்ட அதிகாரிகளையும் அரசு அதிகாரிகளாகவே பாவிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications