தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு.. இன்றிலிருந்து விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான கவுன்சில் தேர்வில் கலந்து கொள்ள இன்றில் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான கவுன்சில் தேர்வில் கலந்து கொள்ள இன்றில் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
அண்ணா பல்கலையில் பொறியியல் கவுன்சிலிங் இந்தாண்டில் இருந்து ஆன்லைன் முறையில் மாற்றப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்வதற்கான ஆன்லைன் பதிவு முறை இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கும் விண்ணப்ப பதிவு வரும் மே 30 தேதி வரை நடைபெறும்.

இதற்காக தமிழகம் முழுக்க 42 மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. காலை 9 மணிக்கு இந்த மையங்கள் திறக்கப்படும். சிபிஎஸ்இ மாணவர்கள் மட்டும் தேர்வு முடியும் வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க காத்திருக்க வேண்டும்.
தமிழகத்தில் மொத்தம் அண்ணா பல்கலை.யின் கட்டுப்பாட்டில் உள்ள 567 கல்லுாரிகளில் உள்ள மொத்தம் 2.50 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களுக்கு இந்த மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கிறது. எப்போதும் போல இல்லாமல் இந்த வருடத்தில் இருந்து ஆன்லைன் மூலம் சேர்க்கை நடத்தப்படுகிறது. மக்கள் சென்னைக்கு வந்து கஷ்டப்படுவதை இது தடுக்கும்.
முக்கியமாக விண்ணப்ப கட்டணம் எவ்வளவு என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. தலித், பழங்குடியினர் மற்றும் அருந்ததியர் மாணவர்கள் கட்டணமாக 250 ரூபாய் செலுத்த வேண்டும். மற்ற மாணவர்கள் 500 ரூபாய் செலுத்த வேண்டும். மாணவர்கள் இதுகுறித்த விவரங்களை ''https://tnea.ac.in/tneaonline18/index.php'' என்ற அண்ணா பல்கலை. பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications