மாதிரி போர் விமானங்களை ஏவிய மாணவர்கள்.. சேலத்தை கலக்கிய இளம் விஞ்ஞானிகள்!
சேலம்: தேசிய அறிவியல் தினத்தை வரவேற்கும் விதமாக சேலத்தில் நடைபெற்ற விழாவில் மாணவ மாணவியர் கலந்து கொண்டு மாதிரி போர் விமானங்களையும், ராக்கெட்களையும் ஏவி, பறக்க விட்டு சாதனை படைத்தனர்.
பிப்ரவரி 28ம் தேதி ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது.
இதை வரவேற்கும் விதமாக சேலத்தில் சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் மாணவ, மாணவியர் கலந்து கொண்ட ஒரு சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

ராக்கெட் வடிவில் அமர்ந்து
இதில் 6500 மாணவ மாணவியர் கலந்து கொண்டு ராக்கெட் வடிவில் அமர்ந்து அசத்தினர். இது ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெறுவதற்காக நடத்தப்பட்டது.

மாணவர்கள் ஏவிய ராக்கெட்டுகள்
இந்த நிகழ்ச்சியின்போது போர் விமானங்கள், மாதிரி ராக்கெட்டுகள் ஆகியவை பறக்க மற்றும் ஏவப்பட்டன. ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்தின் மாணவர்கள் தயாரித்தவை இவை.

ஆணையர் சங்கர் வாழ்த்து
நிகழ்ச்சியில் ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பின் ஸ்ரீமதி கேசன், சேலம் மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவர்கள் வெறும் படிப்போடு நில்லாமல் அறிவியல் அறிவையும் விருத்தி செய்து கொள்ள வேண்டும் என்று காவல்துறை ஆணையர் சங்கர் வலியுறுத்தினார்.

ஊக்கம் தரும் ஸ்ரீமதி
ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பின் ஸ்ரீமதி கேசன் இளம் மாணவர்களின் அறிவியல் திறமையைக் கண்டறிந்து அவர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறார். ஸ்பேஸ் கிட்ஸ் நிறுவனம்தான், மாணவர்களால் தயாரிக்கப்பட்ட கலாம் சாட் செயற்கைக் கோளை தயாரித்து விண்ணில் செலுத்தி அசத்தியது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications