2 வாரம் நிதி அமைச்சராக்குங்க. 200 பேரை அரெஸ்ட் செஞ்சு கருப்பு பணத்தை மீட்பேன்: கெஞ்சுவது சு.சுவாமி!
கோவை: தனக்கு 2 வாரம் மட்டுமே நாட்டின் நிதி அமைச்சர் பதவியை கொடுத்தால் 200 பேரை கைது செய்து கறுப்பு பணத்தை மீட்டுவிடுவேன் என்று பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று சுப்பிரமணியன் சுவாமி பேசியதாவது:
அடுத்த 10 ஆண்டுகளில் உணவுப்பொருள் இறக்குமதி செய்யும் நாடு என்றிருந்த நிலை மாறி, ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா மாறியது. பிறகு 1990-களில் உலகமயமாக்கல் அமலுக்கு வந்தது. இதுபோல நாடு பல மாற்றங்களை எதிர்கொண்டது.

வருமான வரி முறையை மாற்ற வேண்டும்
நாட்டில் ஒழுங்காக வருமான வரி செலுத்துபவர்கள் நடுத்தரப் பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே. இந்த நடுத்தரப் பிரிவினர் செலுத்தும் வருமான வரி மூலம் ரூ. 2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது.

மாற்று வரி வசூல்
வருமான வரி வசூலிப்பதை நீக்க வேண்டும். இந்த வருவாயை மாற்று வழியில் வசூலித்திட யோசிக்க வேண்டும். எனது மதிப்பீட்டில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ. 2.5 லட்சம் கோடி ஊழல் நடந்தது.

ஊழல் தொகை
இந்திய கணக்கு மற்றும் தணிக்கை துறை ரூ. 1.76 லட்சம் கோடி ஊழல் நடந்ததாக மதிப்பிட்டது. கனிம வளம், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு போன்றவற்றில் பல லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது.

ஹைட்ரஜன் வாகனங்கள்
இதை முறைப்படுத்தும்போது வருமான வரி மூலம் திரட்டப்படும் வருவாயை விட கூடுதலான தொகை கிடைக்கும். பெட்ரோல், டீசலுக்கு நாம் அரபு நாடுகளை நம்பி இருக்கிறோம். இதற்கு மாறாக ஹைட்ரஜன் மூலம் இயங்கும் வாகனங்களைக் கண்டுபிடிக்க வேண்டும்.

நிதி அமைச்சர் பதவி
எனக்கு 2 வாரங்கள் மட்டும் நிதியமைச்சர் பதவி தந்தால், நான் இரண்டே வாரங்களில் 200 பேரை கைது செய்து, வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்பேன்.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி பேசினார்.












Click it and Unblock the Notifications