சென்னை சூப்பர் கிங்ஸ் விவகாரம்: பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசனுடன் சு.சுவாமி சந்திப்பு
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதான தடையை நீக்கக் கோரும் வழக்கு தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் சீனிவாசனை பா.ஜ.க.வின் சுப்பிரமணியன் சுவாமி இன்று சென்னையில் சந்தித்து பேசினார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் பிக்ஸிங் விவகாரத்தில் சிக்கியதற்காக 2 ஆண்டுகளுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை அணியின் உரிமையாளரும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவருமான சீனிவாசனை சுப்பிரமணியன் சுவாமி அண்மையில் திடீரென சந்தித்தார். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சு.சுவாமி, சென்னை அணிக்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னணியில், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் சதித் திட்டம் இருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும் இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த டோணியையும் சுப்பிரமணியன் சுவாமி சந்தித்து பேசினார். இதனிடையே சென்னை போட்கிளப்பில் இன்று சீனிவாசனை மீண்டும் சுப்பிரமணியன் சுவாமி சந்தித்தார்.
இச்சந்திப்பின் போதும் சென்னை சூப்பர் அணிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்க்கும் வழக்கு தொடர்பாக இருவரும் ஆலோசித்திருக்கலாம் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications