"தம்" அடிக்காதீங்க தம்பிகளா.. டி.ஆர். வேண்டுகோள்
சென்னை: சென்னையில் இன்று புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி நடந்த பேரணியில் லட்சிய திமுக தலைவரும், நடிகர் - இயக்குநருமான டி.ராஜேந்தர் கலந்து கொண்டார்.
தனது வாழ்க்கையில் இதுவரை புகை பிடித்ததில்லை என்று கூறிய அவர் இளைஞர்கள் புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டு விட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இன்று புகையிலை எதிர்ப்பு தினமாகும். இதையொட்டி தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டன. பாஜக சார்பில் சென்னை மெரீனா கடற்கரையில் இன்று இப்பேரணி நடைபெற்றது.
அதில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், டி.ராஜேந்தர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின்போது டி.ராஜேந்தர் பேசுகையில், நான் இதுவரை சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்தியது கிடையாது. இங்கே நான் கட்சி மற்றும் கொள்கையை பார்த்து வரவில்லை. கையில் எடுத்துள்ள குறிக்கோளை பார்த்து வந்தேன்.
கொடியின் வண்ணத்தை பார்த்து வரவில்லை. நல்ல எண்ணத்தை பார்த்து வந்தேன். கொடியை பார்த்து வரவில்லை - நல்ல கொள்கையை பார்த்து வந்தேன். இளைஞர்கள் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications