காரைக்குடியில் தமிழ் அமைப்புகள் நடத்திய தமிழ்விழா

Subscribe to Oneindia Tamil

காரைக்குடி: காரைக்குடியில் அன்னைத் தமிழுக்காக அனைத்து தமிழ் அமைப்புகளும் இணைந்து தமிழ் விழா நடத்தின.

காரைக்குடி கம்பன் மணி மண்டபம் தமிழ்த் தாய்க் கோயில் வளாகத்தில் தமிழ்ப் பணியாற்றும் இலக்கிய அமைப்புக்களான குறட்கழகம், அண்ணா தமிழ்க்கழகம், கலைஞர் தமிழ்ச்சங்கம், மாவட்ட எழுத்தாளர் சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் தமிழ் விழா, புலவர் முனைவர் ப.நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், குறட் கழகத் தலைவர் நா.மெய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் பேசுகையில்,

நட்சத்திரங்களெல்லாம் ஒன்றாகக் கூடி நிலாவுக்கு விழா எடுப்பதைப் போல, நதிகளெல்லாம் ஒன்றாகக் கூடி கடலுக்கு விழா எடுப்பதைப் போல, நெற்கதிர்களெல்லாம் ஒன்றாகக் கூடி நீர்தரும் மேகத்திற்கு விழா எடுப்பதைப் போல, குத்துவிளக்குகள் எல்லாம் ஒன்றாகக்கூடி கோபுர தீபத்திற்கு விழா எடுப்பதைப் போல, செந்தூரப் பூக்களெல்லாம் ஒன்றாகக் கூடி தென்றலுக்கு விழா எடுப்பதைப் போல, தமிழ் உள்ளங்களெல்லாம், தமிழ் நெடுஞ்சங்களெல்லாம் ஒன்றாகக் கூடி அன்னைத் தமிழுக்கு இன்றைக்கு தமிழ் விழா எடுத்துள்ளோம்.

உலகத்திலேயே மிகத் தொன்மையான நாடு தமிழ் நாடுதான். அதற்கு சாட்சியாக இருந்தது லெமூர்யா கண்டம். உலகத்திலேயே மிகத் தொன்மையான மக்கள் தமிழ் மக்கள் தான்.

அதற்கு சாட்சியாகச் சொன்னால் கல் தோன்றி மண் தோன்றாக்காலத்தில் முன் தோன்றிய மூத்த குடி என்பர் அதைப் போல தொன்மையான இசை தமிழ் இசை தான், தொன் மையான இசை தமிழிசை தான். தொன்மையான மொழி தமிழ் தான் என பெருமையாக குறிப்பிட்டார்.

மேலும், இந்த விழாவில், பாரதி பாடிய மூவர் எனும் தலைப்பில் கம்பரைப் பற்றி பேராசிரியர் எல்.கே.சுபாஷ் சந்திர போஸ், வள்ளுவரைப் பற்றி பேராசிரியர் தே. இராஜாராம், இளங்கோ வைப் பற்றி முனைவர் இராம.சௌந்திரவள்ளி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+