தமிழக மீனவர்களை மீண்டும் விரட்டியடித்த இலங்கை கடற்படை

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே நேற்று மீன்பிடிக்கச் சென்ர ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீண்டும் விரட்டி அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கடற்படையினரால் நேற்று முன் தினம் 14 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் 600 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்துள்ளது.

கச்சத்தீவிற்கு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படை அவர்களை மிகவும் கொடுமையாக தாக்கி விரட்டி அடித்துள்ளது. இத்திடீர் தாக்குதலால் உறைந்துபோன மீனவர்கள் வலைகளை அங்கேயே விட்டுவிட்டு தப்பி வந்துள்ளனர்.

இதனால், அவர்களுக்கு கிட்டதட்ட 20 ஆயிரத்திற்கும் மேல் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகின்றது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தினால் ராமேஸ்வரம் மீனவ மக்கள் அமைதி இழந்து தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+