For Daily Alerts
Just In
காவிரி மேலாண்மை வாரியத்துக்காக தமிழக அரசு தியாகம் செய்ய வேண்டும்.. கமல் சூசகம்
சென்னை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு தியாகம் செய்ய வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை: விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த நடிகர் கமல்ஹாசன் மேலாண்மை வாரியம் அமைக்க எப்படி அழுத்தம் கொடுத்தாலும் பாராட்டுக்குரியதுதான் என்றார். காவிரி விவகாரத்தில் அரசியல் ரீதியாக மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என்றும் கமல் கூறினார்.
காவிரி மேலாண்மை வாரியத்துக்காக தமிழக அரசு தியாகம் செய்ய வேண்டும் என சூசகமாக கூறிய அவர், பின்னர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ராஜினாமா செய்தால் நன்றாக இருக்கும் என்றார்.
திமுகவின் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் யாரேனும் பங்கேற்க வாய்ப்பு உண்டு என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.
Comments
tamilnadu govt sacrifice cauvery management board makkal needhi maiam kamal urges தமிழக அரசு தியாகம் காவிரி மேலாண்மை வாரியம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் வலியுறுத்தல்
English summary
Makkal Needhi Maiam leader Kamal has met press in Chennai Airport. He said Tamil Nadu govt should sacrifice for Cauvery Management board.