ரஜினி கொடும்பாவி வெடி வைத்து தகர்ப்பு.. தமிழர் அமைப்பினர் கைது.. சென்னையில் பரபரப்பு
ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் அமைப்பு ஒன்று ரஜினியின் கொடும்பாவியை வெடி வைத்து தகர்த்தது. இதனால் போயஸ் கார்டன் அருகில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை; கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொண்டதே அரசியல் பரபரப்பாகிவிட்டது.
5 நாட்கள் 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்து வந்த அவர், கடைசி நாளில் உரையில், அரசியல் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும் திறமையான தலைவர்கள் இருந்தும் பயனில்லை என்றும் ரஜினி பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது. ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்திற்கு சில தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

முற்றுகைப் போராட்டம்
தமிழர் முன்னேற்றப் படை என்ற அமைப்பு இன்று போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிடப் போவதாக அறிவித்தபடி, அந்த அமைப்பின் தலைவர் வீரலட்சுமி தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் ரஜினியின் வீடு நோக்கி வந்தனர்.

வெடுகுண்டு வைத்து தகர்ப்பு
செம்மொழி பூங்காவில் சுமார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் அதனையும் தாண்டி ரஜினியின் கொடும்பாவி வெடி குண்டு வைத்து போராட்டக்காரர்கள் தகர்த்தனர்.

சாலை மறியல்
இது நடந்து கொண்டிருக்கும் போதே போராட்டத்தில் பங்கேற்ற இன்னொரு பிரிவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களையும் போலீசார் அப்புறப்படுத்தினர்.

கைது
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட வீரலட்சுமியை போலீசார் கைது செய்தனர். மேலும், அவருடன் வந்த 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ரஜினிகாந்த்தின் வீட்டின் அருகே கூடுதலாக போலீசார் போடப்பட்டிருந்த நிலையில், இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications