திருச்செந்தூர் கோயில் விபத்து நிர்வாகமே பொறுப்பு ... தமிழிசை பேட்டி
திருச்செந்தூர் கோயில் விபத்துக்கு கோயில் நிர்வாகமே பொறுப்பு என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயில் பிரகாரம் இடிந்ததற்கு கோயில் நிர்வாகமே பொறுப்பு ஏற்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, திருச்செந்தூர் கோயில் பிரகாரம் இடிந்து விழுந்ததில் பேச்சியம்மாள் என்ற பெண் இறந்துள்ளார்.

இந்த இடம் ஐயப்ப பக்தர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் வரக்கூடிய இடமாகும். மண்டபம் இடிந்த போது பக்தர்கள் யாரும் வராததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. பலியான பேச்சியம்மாள் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் வழங்க வேண்டும்.
அவரது குழந்தைகளின் நிரந்தர வருமானத்திற்கு அறநிலைய துறையில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் இந்த கோயிலில் பாதுகாப்பில்லை.
இந்து சமய அறநிலையத்துறை கவனம் செலுத்தியிருந்தால் இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம். பக்தர்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை மட்டுமே இந்த சமய அறநிலையத்துறை எடுத்து கொள்கிறது. ஆனால் கோயிலை பராமரிப்பதில் கவனம் செலுத்துவதில்லை.
பிரகார மண்டபம் கட்டி கொடுக்க தனியார் நிறுவனங்கள் முன் வந்துள்ளன. கோயில் நிர்வாகம் மண்டபத்தை முழுமையாக இடித்து விட்டு நல்ல முறையில் கட்டி கொடுக்க வேண்டும். கவர்னர் ஆய்வை குறை கூறுகின்றனர். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கருப்பு கொடி காட்டுவது வரம்பு மீறிய செயல். இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications