காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை அண்ணன் ஸ்டாலின் சிறையில் இருக்கட்டும்- தமிழிசை
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வைரை ஸ்டாலின் போன்றோர் சிறையில் இருக்கட்டும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஸ்டாலின் உள்ளிட்டோர் சிறையில் இருக்கட்டும் என்று தமிழிசை சௌந்தரராஜன் காட்டமாக தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி தமிழகம் முழுவதும் பந்த் நடத்தப்படும் என்று ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் தலைவர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தி கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும். அவ்வாறு அமைக்கும் வரை கைது செய்தாலும் போராட்டம் தொடரும் என்று கூறும் ஸ்டாலின் போன்ற தலைவர்கள் சிறையிலேயே இருக்கட்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications