For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜல்லிக்கட்டு நடைபெறாததற்கு கங்கிரஸ் - திமுக கூட்டணிதான் காரணம்: தமிழிசை தாக்கு

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடியாததற்கு காங்கிரஸ்தான் காரணம் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடியாததற்கு காங்கிரஸ், திமுக கூட்டணிதான் காரணம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், காளைகளை காட்சி பட்டியலில் இணைத்ததால்தான் இவ்வளவு பிரச்சினையும், இன்று நாம் எதிர்க்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளுக்கும் காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசே காரணம் எனவும் குற்றம் சாட்டினார்.

Tamilisai Soundararajan blames on Congress

ஜல்லிக்கட்டுக்கு எதிராக திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்திய போது அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகள், குறிப்பாக பிரதமர் மோடிக்கு எதிராக ஸ்டாலின் பிரயோகித்த வார்த்தைகள் அனைத்தும் கீழ்தரமானவை, அதனை நான் எதிர்பார்க்கவில்லை, அதனை கண்டிக்கின்றேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டு தொடர்பான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்றும் குறிப்பிட்டு உள்ளார். ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் வகையில் அவசரச் சட்டம் கொண்டுவரப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

English summary
BJP state leader Tamilisai Soundararajan blames on Congress over Jallikattu ban
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X