ஸ்டாலின் அந்த ட்வீட் போட்டிருக்கவே கூடாது.. தமிழிசை காட்டம்!
ஸ்டாலினின் ட்விட்டருக்கு தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரை: தூத்துக்குடி விமானத்தில் தமக்கு கண்டனம் தெரிவித்த சோபியாவுக்கு ஆதரவாக ட்வீட் செய்திருந்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தமிழிசை சவுந்தராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமானத்தில் பயணிக்கும்போது, சோபியா என்ற இளம்பெண் பாஜக அரசுக்கு எதிராக பாசிச பா.ஜ.க ஒழிக, மோடி ஒழிக' என்று முழக்கமிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன், அந்த பெண்ணிடம் நேரியாடையாகவே வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் தூத்துக்குடி விமான நிலைய அதிகாரிகளிடமும் புகாரும் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சோபியாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்செய்து பின்னர் 15 நாள் காவலில் வைக்கவும் உத்தரவிட்டனர். இந்த விவகாரத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் தனது பதிவுகளை பதிவிட்டிருந்தார். அதில்,
|
ஸ்டாலினின் ட்விட்டர்
``ஜனநாயக விரோத - கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும். அப்படிச் சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை லட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள். நானும் சொல்கின்றேன்! `பா.ஜ.க-வின் பாசிச ஆட்சி ஒழிக!" என்று பதிவிட்டிருந்தார்.

தமிழிசை கண்டனம்
ஸ்டாலினின் இந்த ட்வீட் தமிழிசைக்கு மேலும் கோபத்தை கூட்டியுள்ளது. ஸ்டாலின் அந்த ட்வீட்டை அப்படி பதிவிட்டிருக்க கூடாது என்று தனது ஆதங்கத்தையும், கோபத்தையும் செய்தியாளர்களிடம் பேசும்போது வெளிப்படுத்தினார்.

தவறான அரசியல்
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தமிழிசை பேசியதாவது: ``உண்மையிலேயே இது தவறான அரசியல். சக அரசியல்வாதிக்கு அச்சுறுத்தல் கொடுக்கபட்டதை ஆதரிப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இதே நிலை ஸ்டாலினுக்கு ஏற்பட்டால் நான் முதல் ஆளாக எதிர்த்திருப்பேன். ஜனநாயக உரிமை என்று கூறிக்கொண்டு விமானத்தின் உள்ளே அந்தப் பெண் ஒழுக்கமில்லாமல் நடந்துகொண்டதைத் தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் ஆதரிப்பதைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. ஸ்டாலின் சரியான அரசியலை நடத்தவில்லை என்பது இதன்மூலம் தெளிவாகிறது.

கருணாநிதி இருந்திருந்தால்...
ஸ்டாலின் அந்த ட்வீட் போட்டிருக்கக்கூடாது. இதனை நான் கண்டிக்கிறேன். திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி இருந்திருந்தால் இதுபோல் நடந்திருக்க மாட்டார். அவர்களும் விமானத்தில் செல்லும்போது இதேபோன்ற சம்பவம் நடந்தால் ஏற்றுக்கொள்வார்களா? அல்லது அவர்களது தொண்டர்கள் தான் ஜனநாயக உரிமை என அமைதியாக இருப்பார்களா? இது போன்ற நிகழ்வு அவருக்கு நடந்திருந்தால் நான் முதல் ஆளாக அவருக்கு ஆதரவாக கண்டனம் தெரிவித்திருப்பேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக












Click it and Unblock the Notifications