முதலமைச்சர் ஜெயலலிதா- மோடி சந்திப்பை விமர்சிப்பதா?... ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு தமிழிசை கண்டனம்
சென்னை : தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்ததை விமர்சித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நெசவாளர்கள் தின விழாவில் பங்கேற்ற பின்னர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு குறித்து விமர்சித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், இரு தலைவர்களின் சந்திப்பின் மூலம் ப.ஜ.க. - அதிமுக இடையே உள்ள ரகசிய உறவு அம்பலமாகி விட்டது எனக்கூறினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழிசை சவுந்தரராஜன், ஜெயலலிதாவுடனான பிரதமர் மோடியின் சந்திப்பு நட்பு ரீதியிலானது என்றும் இந்த சந்திப்பினால் தமிழக மக்களுக்கு பலன் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பை கொச்சைப்படுத்தி பேசுவதை இனி இளங்கோவன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications