ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்தாகுமா.. லக்கானியுடன் தமிழிசை திடீர் சந்திப்பு!
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று நேரில் சந்தித்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று நேரில் சந்தித்தார்.
ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான சூறாவளி பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் படு பிசியாக உள்ளன.

ஆர்கே நகரில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டினார. இதனை தடுக்கக்கோரி அக்கட்சி வேட்பாளர் கரு நாகராஜனுடன் கடந்த சனிக்கிழமை அவர் சாலைமறியலிலும் ஈடுபட்டார்.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி லாக்கானியை தமிழிசை நேரில் சந்தித்தார். அப்போது ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.












Click it and Unblock the Notifications