மதுவிலக்கு பற்றி ஜெ. எதுவும் பேசலையே... தமிழிசை சவுந்தரராஜன்
சென்னை: சுதந்திர தின உரையில் மதுவிலக்கு பற்றி முதல்வர் ஜெயலலிதா அறிவிக்காதது வருத்தம் அளிக்கிறது என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
69வது சுதந்திரதினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமை அலுவலத்தில் அக்கட்சியின மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தேசிய கொடியேற்றி கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:
சுதந்திரம் என்பது பசி, வறுமை, வன்முறை இல்லாத நிலையில் மக்கள் வாழ வேண்டும் என்பதுதான். ஆனால் தமிழகத்தில் மதுவினால் 60 சதவீத மக்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே மது விலக்கை அமல்படுத்த அரசியல் கட்சிகள், மாணவர்கள், பெண்கள் போராடி வருகிறார்கள். ஜனநாயக நாட்டில் எந்தவொரு பிரச்சனையிலும் ஆளுங்கட்சியினர் தங்கள் விருப்பத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் எதிர்க்கட்சியினரின் கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்க வேண்டும். அந்த வகையில் மது விலக்கு பற்றிய அறிவிப்போ அல்லது மது விலக்கு தொடர்பான அறிகுறிகளோ முதல்-அமைச்சரின் சுதந்திர தின விழாவில் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.

போராட்டத்தின் தன்மை உணர்ந்து மக்களின் கருத்தையும் மனதில் வைத்து முதல்வர் மது விலக்கு பற்றி எதுவும் பேசாதது வருத்தம் அளிக்கிறது.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications