பிளஸ் 2 ரிசல்ட் 2017: அரசுப் பள்ளிகள் அபாரம்.. சென்டம் அடித்து 292 பள்ளிகள் அசத்தல்!
தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் 292 பள்ளிகள் முழுத்தேர்ச்சி அடைந்த பள்ளிகள் என்ற பெருமையைப் பெற்று அசத்தல் சாதனை படைத்துள்ளன.
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள பிளஸ் 2 மாணவ, மாணவியர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. அதில் தமிழகத்தில் உள்ள மொத்த அரசுப்பள்ளிகளில் 292 பள்ளிகள் முழுத்தேர்ச்சி அடைந்து சாதனை படைத்துள்ளன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகள் இன்றுவெளியிடப்பட்டுள்ளன.
முன்னதாக நேற்று, ப்ளஸ் டூ தேர்வு முடிவில் இனி ரேங்குகள் முறை இருக்காது என தமிழக அரசு அதிரடியாக அறிவித்தது.
இதனால் தேர்வு முடிவுகள் பற்றிய பயம் இல்லாமல் மாணவ மாணவிகள் தமிழகம் முழுக்க மகிழ்ச்சியாக ரிசல்ட்டை எதிர்கொண்டனர்.

மாணவிகளே அதிகம்
தமிழகத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 92.1% என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவிகளே அதிகளவு
தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

0.7 சதவீதம் அதிகரிப்பு
கடந்த ஆண்டைவிட பிளஸ் டூ தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 0.7 அதிகம் ஆகும். மாணவர்கள் 89.3% தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுத் தேர்வு எழுதியவர்களில் மாணவிகள் 94.5% தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் 1813 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.

அசத்திய அரசுப்பள்ளிகள்
தமிழகத்தில் மொத்தம் உள்ள 2851 அரசு மேல்நிலை பள்ளிகளில், 292 அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்குச் சவால்விடும் வகையில் 100% தேர்ச்சியடைந்து அசத்தல் சாதனைப் படைத்துள்ளன.

விருதுநகர் அரசுப் பள்ளிகள்
அதிலும் விருதுநகர் மாவட்ட அரசுப்பள்ளிகள் முதலிடத்தில் உள்ளன. அடுத்த இடத்தை சென்னையில் உள்ள அரசுப்பள்ளிகள் பெற்று சாதனைப் படைத்துள்ளன. இது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது என்று அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்கள் தெரிவிக்கின்றனர்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications