For Daily Alerts
Just In
மீண்டும் கலக்கியது காமராஜர் மண்! பிளஸ்2 தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம்
சென்னை: விருதுநகர் மாவட்டம் 1985ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டுவரை தொடர்ந்து 28 ஆண்டுகள் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் முதலிடத்தை தக்க வைத்து அசத்தியது.
ஆனால், 2014ம் கல்வியாண்டில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. 2015ம் ஆண்டு மீண்டும் மாநில அளவில் முதலிடத்தை கைப்பற்றியது. 2016ல் மீண்டும் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
இந்த நிலையில், இம்முறை மீண்டும் முதலிடம் பிடித்து, கல்விக் கண் திறந்த காமராஜர் மண் என்பதை விருதுநகர் மீண்டும் நிரூபித்துக் காட்டி அசத்தியுள்ளது.
ஆம், இந்த மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்ச்சி விகிதம், 97.85 ஆகும். தமிழகத்தின் மொத்த தேர்ச்சி விகிதம், 92.1% என்பது குறிப்பிடத்தக்கது.
பெருநகரங்கள் இல்லாத, அடிப்படை கட்டமைப்பு இல்லாத ஒரு மாவட்டம் தொடர்ந்து பிளஸ் டூ தேர்வுகளில் கலக்கி வருவது பாராட்டப்பட வேண்டிய அம்சம்.
Comments
English summary
Virudhunagar district got first place in Plus 2 marks.