காவிரி பந்த்: தமிழக எல்லைகளில் போக்குவரத்து நிறுத்தம்: பயணிகள் அவதி
Recommended Video

சென்னை: தமிழகத்தில் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் தமிழக எல்லையில் மற்ற மாநிலத்திலிருந்து வரும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
திமுக சார்பில் இன்று முழு கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.

வேன்கள் ஓடாது
ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள், பேருந்துகள் ஓடாது என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. வணிகர் அமைப்புகள், திரைப்பட சங்கங்கள் ஆகியவையும் முழு அடைப்புக்கு ஆதரவளித்துள்ளன. திமுகவின் பந்த் போராட்டத்துக்கு பெரும்பாலான தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கடையடைப்பு
தமிழகத்தில் குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்பட்டன. பெரும்பாலான கடைகள் காலை 6 மணி முதலே கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. விவசாயிகளுக்கு ஆதரவான பந்த் என்பதால் பொதுமக்களும் முகம் சுளிக்காமல் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

எல்லையில் நிறுத்தம்
தமிழகம்- கர்நாடகா எல்லையான ஓசூரில் இரு மாநில பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அசம்பாவிதங்கள் நடக்காத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கேரளா பேருந்துகள் தமிழக எல்லை பகுதியான குமுளியில் நிறுத்தப்பட்டுள்ளன. அது போல் குமரி வழியாக கேரளத்திலிருந்து வரும் பேருந்துகள் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன.

வேலைக்கு செல்வோர் அவதி
பள்ளிக்கு பேருந்து மூலம் செல்லும் மாணவர்கள் போக்குவரத்து நிறுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வேலைக்கு செல்வோரும் பேருந்துக்காக காத்திருந்து காத்திருந்து ஓய்ந்து விட்டனர். தேனி, பெரியகுளம் தென்கரையில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட், கறிகடைகள், பேக்கரி, தேனீர் விடுதிகள், வர்த்தக நிறுவனங்கள் உள்பட அனைத்து கடைகள் முழுவதும் அடைக்கபட்டுள்ளன.

பேருந்துகள் குறைவு
பேருந்துகள் குறைவாகவே இயக்கப்பட்டு வருவதால் ரயில் நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பொதுமக்கள் முண்டியடித்து கொண்டு ரயில்களில் கூட்ட நெரிசலில் பணிக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications