குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறார் ஸ்டாலின் - தமிழிசை பொளேர் : வீடியோ
தமிழக அரசு ஊழலற்ற ஆட்சியைக் கொடுத்தால் தான் பாஜகவின் ஒத்துழைப்பு கிடைக்கும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறினார்.
திருச்சி: தமிழக அரசு ஊழலற்ற ஆட்சியை தந்தால் தான் அதற்கு பாஜகவின் ஒத்துழைப்பு கிடைக்கும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறினார். குழம்பிய குட்டையில் ஸ்டாலின் மீன்பிடிக்கப் பார்ப்பதாக தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசியலில் குட்டையை குழப்பி அதில் மீன்பிடிக்கப் பார்க்கிறார்.

மேலும், தமிழக அரசு ஊழலற்ற ஆட்சியை தர வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம். பாஜகவும் அதைத்தான் விரும்புகிறது. மேலும், தற்போது தமிழகத்தில் நடைபெறும் அதிமுக அரசு எந்த ஊழலில் ஈடுபடாமல் இருந்தால் தான் அதற்கு பாஜகவின் ஒத்துழைப்பு கிடைக்கும் என கூறினார்.
நீட் தேர்வு விவகாரம், தமிழக விவசாயிகள், போராட்ட, நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டம் உள்ளிட்ட பல விவகாரங்களில் மத்திய அரசு தமிழகத்தின் மீது பாராமுகமாகத்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications