டாஸ்மாக் மூடியதால் வருவாய் இழப்பு.. ரூ.1,43,962 கோடி கடன் வாங்க முடிவு: பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னை: இந்த நிதியாண்டில் ரூ.1,43,962 கோடி கடன்பெற தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக பட்ஜெட் உரையின்போது நிதி அமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
அரசு அலுவலர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளதால் தமிழக அரசுக்கு கூடுதலாக ரூ.14719 கோடி அதிக செலவாக உள்ளது. சம்பள செலவினங்களுக்கான ஒதுக்கீடு ரூ. 52, 171 கோடியாக இருக்கும். அதேநேரம், நெடுஞ்சாலைகளில் மதுபானக்கடைகளுக்கு விதிக்கப்பட்ட தடையால் 2017-18 இல் கணிக்கப்பட்டதைவிட வருவாய் குறைந்துள்ளது.

எனவே, இந்த நிதியாண்டில், ரூ1,43,962 கோடி கடன் பெற தமிழக அரசுதிட்டமிட்டுள்ளது. 2018-19ல் அரசின் வருவாய் ரூ1.76 லட்சம் கோடியாக இருக்கும்.
வடசென்னைக்கான வெள்ள தடுப்பு மேலாண்மைக்கு ரூ.3,243 கோடியில் திட்டம் தயாரிக்கப்படும். நகர்ப்புற மேம்பாட்டுக்கு ரூ300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வேலைதேடும் இளைஞர்களுக்கு திறன்மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் பயிற்சி வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications