நெல்லை மருத்துவமனை பல்நோக்கு மருத்துவமனையாகிறது - பட்ஜெட்டில் ரூ. 150 கோடி ஒதுக்கீடு
நெல்லை: நேற்றைய தமிழக பட்ஜெட் அறிவிப்பில் நெல்லையில் உயர் தர பல்நோக்கு மருத்துவமனை அமைக்க 150 கோடி ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில், நெல்லையில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை அமைக்க 150 கோடி ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் நெல்லையில் தற்போதுள்ள அரசு மருத்துவனையை தரம் உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட மக்களுக்காக நெல்லையில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு தனியார் மருத்துவமனைக்கு ஈடாக உயர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதற்கு தேவையான அனைத்து நவீன கருவிகளும் இங்கு உள்ளன. இதனால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து தினமும் சராசரியாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இங்கு வருவது வழக்கம்.
இதனால் மருத்துவமனை வாளகம் 24 மணி நேரமும் சுறுசுறுப்பாக இருக்கும். இங்கு 20க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவுகள் செயல்படுகின்றன. ஆயினும் உயர் சிகிச்சை பிரிவில் தேவையான கருவிகளின் பற்றாக்குறை உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இப்போது புதிதாக பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. அரசு மருத்துவமனைக்கு சொந்தமான காலி மனைகள் நிறைய உள்ளன. இதனால் மருத்துவமனையை மல்டி ஸ்பெசலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தினால் வசதியாக இருக்கும்.
இதனால் தற்போது இருக்கும் சிறப்பு பிரிவில் உயர் சிகிச்சை வசதிகள் மேம்படுத்தபட வாய்ப்பு இருக்கும். கூடுதலாக மருத்துவமனை கட்டிடங்கள், அறுகை சிகிச்சை கட்டிடங்கள், மருத்துவர்களும் நியமிக்கப்படுவார்கள். எனவே அரசின் இந்த அறிவிப்பு மருத்துவ கல்லூரிக்கு பொன் விழா பரிசாக அமைய உள்ளதாக பலரும் தெரிவித்தனர்.
அதன் பலனாக இப்பொழுது இந்த பட்ஜெட் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications