இந்த ஆட்சியையா கலையப்போகிறது என்று சொன்னீர்கள்.. எடப்பாடி முகத்தில் அந்த சிரிப்பை கவனித்தீர்களா?
Recommended Video
சென்னை: இந்த ஆட்சியையா கலையப்போகிறது என்று சொன்னீர்கள் என்று கேட்பதை போல இருந்தது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் முகத்தில் உள்ள புன்னகை.
சசிகலா ஆதரவு அதிமுக பத்திரிகையான, 'நமது எம்ஜிஆர்' நேற்று முன்தினம் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. இந்த மாதமே எடப்பாடி ஆட்சி கலைக்கப்படும் என்றும், ஆளுநர் ஆட்சியை பிரகடனப்படுத்த தேவைப்படும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில்தான், இன்று இரட்டை இலை சின்னம் தங்கள் அணிக்கு கிடைத்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் முகத்தில் முன்பைவிட பல மடங்கு மகிழ்ச்சி தெரிந்தது. சிரித்தபடியே, நியாயம் வென்றுவிட்டது, என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
இந்த ஆட்சியையா கலையப்போகிறது என்று சொன்னீர்கள் என்று தினகரன் தரப்பை பார்த்து கேலி செய்வதை போல அவரது சிரிப்பு இருந்தது.