சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு.. எச்சரிக்கும் வானிலை மையம்!
வங்கக்கடலில் உருவாகவுள்ள 2 காற்றழுத்த தாழ்வு நிலைகளால் சென்னை உட்பட தமிழக கடலோர மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்தியா வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

டெல்லி வங்கக்கடலில் அடுத்த வாரம் உருவாகவுள்ள 2 காற்றழுத்த தாழ்வு நிலைகளால் சென்னை உட்பட தமிழக கடலோர மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்தியா வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 27 ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. தொடக்கத்தில் அதிரடி காட்டிய வடகிழக்குப் பருவமழை பின்னர் இருந்த இடம் தெரியாமல் சென்றுவிட்டது.
தமிழகத்துக்கு மழையை கொடுக்கும் வகையில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஒடிஷா நோக்கி நகர்ந்ததால் தமிழகம் கடந்த ஒரு வாரமாக மழை பெறும் வாய்ப்பை இழந்துள்ளது. இதனால் இதுவரை பெய்ய வேண்டிய சராசரி அளவு மழைக்கூட தமிழகத்துக்கு கிடைக்கவில்லை.

21ஆம் தேதி ஒன்று
இந்நிலையில் வங்கக்கடலில் அடுத்த வாரம் இரண்டு புதிய காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாகவுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 21ம் தேதி அந்தமான் அருகே ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மாவட்டங்களில் மழை இருக்கும்
அந்தமான் அருகே உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வுநிலையை பொறுத்தவரை பெரும்பாலும் அது தமிழகம் நோக்கி வர வாய்ப்பில்லை என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. ஆனால் காற்றின் சுழற்சியை பொறுத்து தென் மாவட்டங்களில் மழை பெய்யலாம் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு
மேலும் அடுத்தபடியாக தென்கிழக்கு வங்க கடலில் வரும் 27ஆம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்கிழக்கு வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழக கடலோர மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்ய அதிகம் வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை அறிவிப்பால் மகிழ்ச்சி
கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெயில் காய்ந்து வருகிறது. இந்நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலைகளால் தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்யும் வெளியாகியுள்ள தகவல் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications