அப்துல் கலாம் இறுதிச்சடங்கு: தமிழகத்தில் நாளை பொது விடுமுறை அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவையொட்டி தமிழகத்தில் அனைத்து தொழில் நிறுவனங்களும் நாளை(வியாழன்)பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று தொழிலாளர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள டாக்டர் கலாம் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெறுவதால், வியாழக்கிழமை அன்று (30.07.2015) தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. அன்றைய தினம் அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகள் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக ஆளுநர் ரோசய்யா பிறப்பித்துள்ளார்.

Tamilnadu Government announced public Holiday on 30-07-2015 for cremation of kalam

இதனிடையே தொழிலாளர் நல ஆணையம் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

" முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் மறைவையொட்டி அன்னாரது இறுதிச்சடங்கு நாளை (ஜூலை 30ஆம் தேதி) ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு தமிழக அரசு அன்றைய தினத்தை (30ஆம் தேதி) பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. அன்றைய தினம் முன்னாள் குடியரசு தலைவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக Negotiable Instruments Act 1881-ன் கீழ் அனைத்து தொழில் நிறுவனங்களும் ஒரு நாள் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+