தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி.. 'நீரா' பானம் உற்பத்தி செய்ய 3 நிறுவனங்களுக்கு தமிழக அரசு அனுமதி
சென்னை: தென்னை விவசாயிகளுக்கு உதவும் வகையில் மூன்று நிறுவனங்களுக்கு 'நீரா' பானம் உற்பத்தி செய்யும் உரிமையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார்.
தென்னை விவசாயிகளுக்கு உதவும் வகையில், அவர்களது வருமானத்தை உயர்த்த தென்னம்பாளையிலிருந்து 'நீரா' பானத்தை இறக்கவும், அதனை பதப்படுத்தி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்ய உதவும் வகையில், 'தமிழ்நாடு நீரா விதிகள், 2017' என்பதை வடிவமைத்து, அறிவிக்கை செய்துள்ளது.

நீரா பானத்திலிருந்து, நீரா வெல்லம், நீரா பாகு, நீரா சர்க்கரை, நீரா சாக்லெட்கள், நீரா கூழ், நீரா கேக் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்ய முடியும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கிராமப்புற வேலைவாய்ப்பைப் பெருக்கவும், விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்கவும் இதனால் வழி ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்திடம் பதிவு செய்து தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் நீரா பானத்தையும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களையும் உற்பத்தி செய்ய முடியும். பிறருக்கு அனுமதி இல்லை.
கோவை மாவட்டத்திலுள்ள விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவனம், கோவை தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள புதுக்கோட்டை தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் ஆகிய 3 நிறுவனங்களுக்கு, நீரா பானம் உற்பத்தி செய்யவும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் உரிமங்களை முதல்கட்டமாக முதல்வர் நேற்று வழங்கினார்.
தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களில் உள்ள விவசாயிகளுக்கு நீரா வடிப்பது தொடர்பாகவும், நீரா பானத்திலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வது தொடர்பாகவும் தமிழ்நாடு அரசு பயிற்சிகள் வழங்க உள்ளது.
இதேபோல பனை மரத்தில் இருந்து எடுக்கப்படும் பதநீர், அதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் கருப்புகட்டி உள்ளிட்ட பல்வேறு மதிப்பு கூட்டு பொருட்களுக்கு தமிழக அரசு ஊக்கம் தர வேண்டும் என்பது, ஏழை, எளிய விவசாயிகள் கோரிக்கையாக உள்ளது.
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications