உலகின் தலைசிறந்த நாடாக இந்தியாவை மாற்ற உறுதியேற்போம்.. ஆளுநர் வித்யாசாகர் ராவ் சுதந்திர தின வாழ்த்து

நாட்டின் 71வது சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

நாட்டின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

நாட்டில் உள்ள அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த சுதந்திர தின வாழ்த்துக்கள். நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் விட்ட வீரமிக்க சுதந்திர போராட்ட வீரர்களை இந்த நாளில் நினைவு கூருவோம்.

 Tamilnadu governor and CM wishes people for independence day

நாட்டின் விடுதலைக்காக போராடிய தியாகிகளுக்கு நமது வணக்கத்தை தெரிவித்துக் கொள்வோம். தேசபக்தியை ஊக்குவிப்பதோடு நமது நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உயர்த்துவோம் என்று அனைவரும் உறுதிஏற்போம். நாட்டின் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு உலகின் தலைசிறந்த நாடாக மாற்றுவோம் என்று உறுதியேற்போம்.

இதே போன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது : இந்திய விடுதலைக்காக போராடிய வீரர், வீராங்கணைகளை நினைவு கூரும் நன்னாள் இது.

இந்திய நாட்டின் தனிச்சிறப்பான வேற்றுமையில் ஒற்றுமை காணும் உணர்வினை காத்து, சாதி, மத வேறுபாடுகளை களைய வேண்டும். நாட்டினை வளமையும் வலிமையும் மிக்கதாக உருவாக்கிட நாம் அனைவரும் ஒற்றுமையுடன் உழைத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+