800 அரசு தொடக்கப் பள்ளிகள் மூடல்? 10 மாணவர்களுக்கு குறைவான பள்ளிகள் மூடல் எனத் தகவல்
தமிழகத்தில் 800 அரசு பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் 800 அரசு பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. இந்நிலையில் 10க்கும் குறைவான மாணவர்கள் இருக்கும் பள்ளிகளை மூட பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக 800 பள்ளிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூடப்படும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அரசாணை விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. அரசின் இந்த முடிவுக்கு ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications