ஆர்கே நகர் இடைத்தேர்தலில் மகுடம் சூடப்போவது யார்?... களைகட்டும் 'பெட்டிங்'!
ஆர்கே நகர் இடைத்தேர்தல் சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமில்லாமல் போய்க்கொண்டிருக்கும் நிலையில் சேலத்தில் வெள்ளி கட்டி பெட்டிங்கும் களை கட்டுகிறதாம்.
Recommended Video

சென்னை : ஆர்கே நகர் தேர்தல் முடிவகள் தமிழக அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தியாக பார்க்கப்படுவதால் சென்னை, சேலம் என பல இடங்களில், தங்கம், வெள்ளி, ரொக்கம் வைத்து நடத்தப்படும் பெட்டிங் சூடுபிடிக்கிறதாம். ஆனால் இவற்றிற்கான ஆதாரம் சிக்காததால் நடவடிக்கை எடுக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் 11ம் சட்டமன்ற தொகுதி. வட சென்னை மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ள இதன் சட்டமன்ற தொகுதி எல்லைகளாக இராயபுரம், துறைமுகம், பூங்கா நகர், பெரம்பூர், திருவொற்றியூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஆர்கே நகர் தொகுதியில் 2.28 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எங்கள் தொகுதி பிரச்னைகளை கேட்பதற்கு எந்த அரசியல் பிரதிநிதியும் இல்லை என்று கவலைப்பட்டனர் ஆர்கே நகர் மக்கள், அதே சமயம் இந்த ஆண்டு ஆர்கே நகர் மக்களுக்கு செல்வசெழிப்பான ஆண்டாக மாறியது. இரண்டு முறை அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தல்களில் வெற்றிக்காக காசை தண்ணியாக வாரி இறைத்த அரசியல் கட்சிகளால் மக்களின் மாத செலவில் பற்றாக்குறை ஏற்படவில்லை.

சூடு பிடிக்கும் பெட்டிங்
இந்நிலையில் அதிமுகவா, திமுகவா, தினகரனா யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு தமிழகம் முழுவதும் கிளம்பியுள்ளது. இந்த நிலையில், ஆர்.கே நகரில் ஜெயிப்பது யார் என்பதில் பெட்டிங் நடக்கிறது.

சவுகார்பேட்டையும் பிசி
சேலம் செவ்வாய்ப்பேட்டையில் 5 கிலோ, சிவதாபுரம், பனங்காடு, மணியனூரில் 3 கிலோ வரை வெள்ளிக்கட்டிகளும், அதேபோல் 100 ரூபாய் முதல் லட்சக்கணக்கில் பந்தயம் கட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடமாநிலத்தைச்சேர்ந்த தொழிலதிபர்கள் அதிகம் வசிக்கும் செளகார்பேட்டையிலும் பெட்டிங் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

லாபத்தை பொறுத்து
இங்கும் தங்கம், வெள்ளி, ரொக்கம் பந்தயத்தில் கட்டுப்பட்டு வருகிறது. போன் மூலம், பந்தய தொகையை சொல்லிவிட்டு, ரகசிய எண் பெற்றுக்கொள்ளலாம். அந்த எண்ணைக்கொண்டு தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு வெற்றி பெற்றால் லாபத்தொகையை பெற்றுக்கொள்ளலாம். இந்த வகையில் தான் பெட்டிங் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

ஆதாரங்கள் இல்லை
பந்தயம் நடக்கும் இடங்களில் மாறுவேடத்தில் போலீசார் ரோந்து வரவுள்ளதாகவும், தொலைப்பேசி அழைப்புகளைக்கொண்டு நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சரியான ஆதராங்கள் எதுவும் சிக்காததால் நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர் காவல்துறையினர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications