தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க சபாநாயகர் நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் நேரில் விளக்கம் தர சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கையில்லை என கூறி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். இதையடுத்து அவர்கள் புதுச்சேரியிலுள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்தனர்.

இந்த நிலையில், சபாநாயகர் தனபால் அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அவர்கள் அளித்த பதிலில் திருப்தியில்லாததால் மீண்டும் ஒருமுறை நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டிருந்தார்.
இந்த நிலைியல், செப்டம்பர் 14ல் தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் நேரில் வந்து விளக்கதர வேண்டும் என்று சபாநாயகர் தனபால் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தினகரன் பக்கம் உள்ள 18 எம்எல்ஏக்களுக்கு இந்த நோட்டீசை சபாநாயகர் அனுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications