சென்னையில் "இந்த" தேதியில் நல்ல மழை பெய்யும்- தமிழ்நாடு வெதர்மேன்
Recommended Video
சென்னை: சென்னையில் வரும் 8-ஆம் தேதி நல்ல மழையை எதிர்பார்க்கலாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்தார்.
தமிழகத்தில் வரும் 8-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையங்கள் கூறியுள்ளன. நாளை கனமழை பெய்யும் என்பதால் தமிழகத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யுமாம். இந்நிலையில் இந்த மழை எப்படி இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
[ நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை.. பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்க தமிழக அரசு உத்தரவு! ]
காற்றை வலுப்படுத்தும்
அவரது பதிவில் கூறுகையில், சென்னையில் இரவு அல்லது பகல் நேரங்களில் நல்ல மழை பெய்யும். அதுபோல் புறநகர் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். சென்னையில் தற்போது இதுதான் நடக்கும். அரபிக் கடலில் உருவாகவுள்ள புயல் கிழக்கு பகுதியில் உள்ள காற்றை வலுப்படுத்தும்.
8-ஆம் தேதி நல்ல மழை
தமிழகத்தில் குன்னூர், கேட்டி, பாபநாசம், கன்னியாகுமரி, பேச்சிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்யும். நாளை கொடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட்டுக்காக தமிழகம் மற்றும் கேரளத்தை சேர்ந்த மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். சென்னையில் வரும் 8-ஆம் தேதி காலை நல்ல மழை பெய்யும்.
கனமழை எச்சரிக்கை
சென்னையில் நள்ளிரவு மற்றும் காலை வேளையில் மழை பெய்வது தொடரும். கனமழை குறித்த எச்சரிக்கைக்காக மக்கள் பயப்பட வேண்டாம். எல்லா கனமழை எச்சரிக்கைகளும் வெள்ளத்தை ஏற்படுத்தாது.
இந்திய கடலுக்கு பாதிப்பில்லை
நமக்கு நல்ல மழை தேவை. அதை வரவேற்க வேண்டும். கண்டு அஞ்சக்கூடாது. அரபிக் கடலில் உருவாகவுள்ள புயலானது ஓமனை நோக்கி நகரும். இதனால் இந்திய கடலுக்கு நேரடியாக எந்த பாதிப்பும் ஏற்படாது. நமது கடற்கரைக்கு மிக மிக தூரத்திலேயே புயல் உருவாகிறது என்று அவர் கூறியுள்ளார்.