மழையின் போது ஏற்படும் மின் விபத்துகள்... இந்த எண்களுக்கு 'ட்ரிங், ட்ரிங்' பண்ணுங்க!
மழையின் போது மினதடை அல்லது பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சென்னை : மழைக்காலத்தில் மின்தடை ஏற்பட்டாலோ மின்பாதிப்புகள் ஏற்பட்டாலோ பொதுமக்கள் உடனடியாக அந்தந்த மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு முன்எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் இப்போது தான் தொடங்கியுள்ளன.
பொதுமக்கள் தங்களது சிரமங்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதே போன்று மின்தடை மற்றும் மின்பாதிப்புகள் ஏற்பட்டால் அது குறித்து உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மின்விபத்து புகார் எண்கள்
மின்விபத்துகளை தடுக்க மக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மக்கள் புகார் தெரிவிக்க வேண்டிய எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதிக்கான மின் வாரிய பொறியாளர்கள், மேற்பார்வை மற்றும் செயற்பொறியாளர்களின் எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.

மேற்பார்வை பொறியாளர்கள் எண் வெளியீடு
சென்னை தெற்கு மேற்பார்வை பொறியாளர் : 9445850111, சென்னை தெற்கு மேற்பார்வை பொறியாளர் 2 : 9445981258, சென்னை மத்திய மேற்பார்வை பொறியாளர் : 9445850707, சென்னை வடக்கு மேற்பார்வை பொறியாளர் : 9445850959, சென்னை மேற்கு மேற்பார்வை பொறியாளர் : 9445850300 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

தயார் நிலையில் ஊழியர்கள்
மின்விபத்தை தடுக்க அதிகாரிகள் தலைமையில் வழக்கம்போல் குழு அமைக்கப்பட்டுள்ளது. மின்விபத்து தொடர்பாக வரும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும், சேதமாகும் மின் கம்பங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும், தாழ்வான பகுதிகளில் தொங்கும் மின் வயர்களை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை
மின்விநியோகம் தடைப்படாமல் இருக்க, ஊழியர்கள் யாரும் விடுமுறை எடுக்காமல் பணிக்கு வரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மின்சாதனங்கள் தயார் நிலையில் இருக்கும் வைக்கும்படி மண்டல அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையும் அளிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது












Click it and Unblock the Notifications