அலைபாய்ந்த கூந்தலுடன் பயணித்த மாணவி.. பாய்ந்து தாலி கட்ட முயன்ற வாலிபர்.. செம தர்ம அடி!
மேலூர்: மதுரையில் ஓடும் பஸ்சில் பள்ளி மாணவிக்கு தாலி கட்ட முயன்ற டாஸ்மாக் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம், சேக்கிபட்டியில் இருந்து மேலூருக்கு அரசு பேருந்து ஒன்று நேற்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது மேலூர் பிள்ளையார் கோயில் ஸ்டாப் அருகே இருக்கையில் இருந்து எழுந்த ஒரு நபர் திடீரென அந்த பஸ்சில் இருந்த பிளஸ் 2 மாணவிக்கு தாலி கட்ட முயன்றார்.
மாணவி சத்தம் போடவே, சக பயணிகள் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரை மேலூர் மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் மேலவலவைச் சேர்ந்த கல்லாணை என்றும், டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. அவர் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணிற்கு கூந்தல் நீளமாக இருக்க வேண்டும், நல்ல நிறமாக இருக்க வேண்டும் என தனது நண்பர்களிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார். இவர் கூறியபடி எந்த பெண்ணும் அமையாததால் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் எதிர்பார்த்தபடி அந்த மாணவி இருந்தார் என்பதால் அவரை பல நாட்களாக பின் தொடர்ந்த கல்லாணை ஓடும் பஸ்சிலேயே அவருக்கு தாலி கட்ட முயன்றுள்ளார். இதனையடுத்து கல்லாணையை கைது செய்த போலீசார் அவரை மேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications