கூடலூர் அருகே புலி தாக்கி பெண் பலி!
Subscribe to Oneindia Tamil
கூடலூர்: தமிழகம்- கேரளா எல்லையில் புலி அடித்து தேயிலை தோட்ட தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கூடலூர் அருகே ஓட்டோடுவயல் என்ற இடத்தில் உள்ள சோளக்காடு எஸ்டேட்டில் வேலைக்குச் சென்ற சிவகுமார் என்பவரது மனைவி மகாலட்சுமியை புலி அடித்து கொன்றது.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பொது மக்களும் தொழிலாளர்களும் சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர். இதனால் குறிப்பிட்ட தேயிலை தோட்டத்தில் வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் அங்கிருந்து திரும்பினர்.
உதகையில் கொடநாடு எஸ்டேட் பகுதியில் சுற்றித் திரிந்த சிறுத்தை பிடிபட்ட நிலையில் கூடலூர் அருகே புலி அடித்து பெண் ஒருவர் பலியாகி இருப்பது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications