'போன வைடா..." விவகாரம்: சீமானை தே.பா. சட்டத்தில் கைது செய்யக் கோரி தேனியில் போராட்டம்
தேனி: தெலுங்கு இன மக்களை இழிவுபடுத்தி பேசியதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி தேனியில் தெலுங்கு சமுதாய கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய சீமான், மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் மகால் தமிழர்களின் அவமான சின்னம் என்று விமர்சித்திருந்தார். மேலும் வீரபாண்டிய கட்டபொம்மனையும் சாடி பேசினார்.

இதனைத் தொடர்ந்து தேனியைச் சேர்ந்த ஜெகதீஸ் என்ற இளைஞர் சீமானை போனில் தொடர்பு கொண்டு இது குறித்து பேசினார். இந்த உரையாடலின் போது ஆவேசமடைந்த சீமான், "போனை வைடா...ங்....தா" என கூறுவதாக ஒரு ஆடியோ சமூக வலைதளங்கள், வாட்ஸ் அப்பில் பரவியிருந்தது.
இதன் பின்னர் ஜெகதீஸ் என்ற அந்த இளைஞரை நாம் தமிழர் கட்சியினர் அடித்து மண்டையை உடைத்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து சீமான் வீட்டை சென்னையில் முற்றுகையிடும் போராட்டத்தை நாயுடு சங்கத்தினர் அண்மையில் நடத்தினர்.
இந்நிலையில் சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கோரி தெலுங்கு சமுதாய கூட்டமைப்பு சார்பில் தேனியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் தெலுங்கு சமூகப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
-
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான் -
ஒரே ஒரு தோட்டா.. காட்டி விடுவேன் டாட்டா.. சமூக விரோதிகளுக்கு சீமான் வார்னிங் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்?












Click it and Unblock the Notifications