மக்கள் நீதி மய்யத்தின் உயர்நிலைக்குழு கலைப்பு.. கமல்ஹாசன் அதிரடி
மக்கள் நீதி மய்யத்தின் தற்காலிக உயர்நிலைக்குழு கலைக்கப்படுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தற்காலிக உயர்நிலைக்குழு கலைக்கப்படுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நடிகர் கமல் தனது அரசியல் கட்சி பெயரை மக்கள் நீதி மய்யம் என்று அறிவித்தார். தொடர்ந்து கட்சிக் கொடியையும் அவர் அறிமுகம் செய்தார்.
மேலும் கட்சியின் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் என நடிகை ஸ்ரீபிரியா, கமிலா நாசர் உள்ளிட்டோரின் பெயர்களை அறிவித்து அறிமுகம் செய்து வைத்தார். இந்நிலையில் நடிகர் கமல் இன்று தனது கட்சியின் உயர்நிலைக்குழுவை கலைத்துள்ளார்.

உயர்நிலைக்குழு கலைப்பு
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் நடிகர் கமல்ஹாசன் முதல் முறையாக கட்சிக்கொடியை ஏற்றிவைத்தார். இதைத்தொடர்ந்து பேசிய அவர் மக்கள் நீதி மய்யத்தின் தற்காலிக உயர்நிலைக்குழு கலைக்கப்படுவதாக கூறினார்.

செயற்குழு உறுப்பினர்களாக
உயர்நிலைக்குழுவில் இருந்தவர்கள் செயற்குழு உறுப்பினர்களாக செயல்படுவார்கள் என்றும் நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். உயர்நிலைக்குழுவில் இருந்து ஸ்ரீபிரியா, கமீலா நாசர், பாரதி கிருஷ்ணகுமார் உள்ளிட்ட 11 பேர் செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

துணைதலைவர் ஞானசம்பந்தன்
மேலும் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளையும் நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். அதன்படி மக்கள் நீதி மய்யத்தின் தலைவராக கமல்ஹாசன் செயல்படுவார் என்றும் துணைத் தலைவராக ஞானசம்பந்தன் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுச்செயலாளர் அருணாச்சலம்
கட்சியின் பொருளாளராக சுரேஷ், பொதுச்செயலாளராக அருணாச்சலம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டசபை தொகுதி வாரியாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மன்னிப்பு கேட்ட கமல்
இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகம் முன் திரண்ட தொண்டர்களால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதற்கு கமல்ஹாசன் தனது பேச்சின் இடையே மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications