பா.ஜ.க. அணியில் தே.மு.தி.க.வுக்கான தொகுதி குறித்து பேச்சுவார்த்தை: தமிழருவி மணியன்
சென்னை: பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில், தே.மு.தி.க.வுக்கான தொகுதிகள் பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, பாமக, பாஜகவை இணைப்பதற்கான முயற்சிகளை காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் மேற்கொண்டார். தற்போதுவரை பாஜக அணியில் மதிமுக மட்டுமே இணைந்துள்ளது.
தேமுதிக, பாமக ஆகியவற்றுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் தொகுதிப் பங்கீடுதான் பெரும் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த தமிழருவி மணியன், பாரதிய ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு எத்தனை தொகுதி வழங்கப்படும் என்பது குறித்த பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது,. இது இன்னும் 2 நாட்களில் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.
பா.ஜ.க., தே.மு.தி.க., பா.ம.க. மற்றும் கொங்கு அமைப்புகளைக் கொண்ட சக்தி வாய்ந்த ஒரு கூட்டணி அ.தி.மு.க. கூட்டணிக்கு மாற்றாக உருவாகும் என்றார்.